/* */

மீனவ பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணி போட்டி தேர்வுக்கு பயிற்சி

மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணியில் சேர்வதற்கான ஆயத்த பயிற்சி பற்றி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மீனவ பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணி போட்டி தேர்வுக்கு பயிற்சி
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  (கோப்பு படம்).

மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் 11. 7. 2017 அன்று சட்டப்பேரவை அறிவித்ததின்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்தியேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிக்களுக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை நடத்தி வருகிறது. மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பபடிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, 18.11.2023 பிற்பகல் 5 மணிக்குள் உரிய ஆவணங்களுடன் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் எண் 16, 5- வது மேற்கு குறுக்கு தெரு, காந்தி நகர், காட்பாடி- வேலூர் – 632006

அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ விண்ணப்பிக்க வேண்டும் அலுவலக தொலைபேசி எண். 0416- 2240329 மற்றும் adfifvellore1@ gmail.com என்ற மினனஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், வெளியிட்டுள்ள செய்தி தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Nov 2023 6:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!