/* */

போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி கைது

Coimbatore News- போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி கைது
X

Coimbatore News- சூர்ய பிரசாத்

Coimbatore News, Coimbatore News Today- கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த சூர்ய பிரசாத், இந்து முன்னணி நகரத் தலைவராக இருந்து வருகிறார். இவர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறையில் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இவர் கடந்த 30 ஆம் தேதி இரவு செல்வபுரம் வடக்கு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த மீன் கடை நடத்தி வரும் அசாருதீன் என்பவர் தன்னை செல்போனில் படம் எடுத்ததாக கூறி, அவரை மிரட்டி செல்போனை பறித்து போலீஸில் ஒப்படைத்தார். மேலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

செல்வபுரம் போலீஸார் அந்த செல்போனை ஆய்வு செய்த போது, அந்த செல்போனில் புகைப்படங்கள் ஏதும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த செல்போனை சைபர் தடயவியல் துறையினருக்கு சோதனைக்கு போலீசார் அனுப்பினர். அதை சோதித்த தடயவியல் துறை அதிகாரிகள் அந்த செல்போனில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் எதுவும் டெலிட் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து சந்தேகம் அடைந்த செல்வபுரம் காவல் துறையினர் சூரிய பிரசாத்திடம் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு தனி பாதுகாவலர் வேண்டும் என்பதற்காக அசாருதீனை மிரட்டி செல்போனை பறித்து பொய் புகார் அளித்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அசாருதீனிடம் புகாரை பெற்ற செல்வபுரம் போலீசார் , அதன் அடிப்படையில் இந்து முன்னணி பிரமுகர் சூர்ய பிரசாத்தை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், முறையற்ற தடுப்பு, ஆபாசமாக பேசுதல், உட்பட ஐந்து பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக மீன்கடை நடத்தி வருபவர் மீது பொய்புகார் அளித்து இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 3 May 2024 1:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...