/* */

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்..!

பொன்னேரியில் திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து  உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்..!
X

திருவள்ளூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின் 

தமிழ்நாட்டில் விண்ணப்பித்த 1கோடியே 60லட்சம் பேருக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி உறுதி. மோடி மீண்டும் பிரதமராக கூடாது என விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் உண்டா எனவும் உதயநிதி கேள்வி? மீனவர் சமூக மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தேசிய மீனவர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும் உதயநிதி உறுதி. 40க்கு 40 வெற்றி பெற்று கலைஞர் பிறந்தநாள் பரிசாக வழங்க வேண்டும் என கட்சியினருக்கு உதயநிதி வேண்டுகோள்.

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைச்சர் உதயநிதி திறந்த வேனில் நின்றபடி பரப்புரையில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் அனைவரும் நலமாக உள்ளீர்களா என கேட்டு, நான் நலமாக இருக்குறேனா என கேட்க மாட்டீர்களா என கேட்டு பிரச்சாரத்தை துவக்கினார். முதலில் காலதாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும், வழி நெடுகிலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்து திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி எனவும், நரேந்திர மோடி வீட்டிற்கு செல்வது உறுதி என வாழ்த்தி அனுப்பியதால் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதாக கூறினார்.
உச்சி வெயிலை விட உக்கிரமாக இருக்கும் ஒன்றிய மோடி அரசை விரட்ட காத்திருக்கிறீர்கள், அதற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். கடந்த தேர்தலில் 3.57லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், இந்த முறை அந்த வெற்றி போதாது எனவும், அப்போது ஒன்றாக இருந்த எதிரிகள் தற்போது தனி தனியாக வருவதால் இந்த தேர்தலில் குறைந்தது 5லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
குறைந்தது 5லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் மாதம் 2 நாட்கள் இந்த தொகுதிக்கு வந்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். நீங்கள் அளிக்கும் ஓட்டு மோடி தலையில் வைக்கும் வேட்டு எனவும் தெரிவித்தார்.

சசிகாந்த் செந்திலுக்கு இது முதல் தேர்தல் அல்ல, ஏற்கனவே கர்நாடகாவில் பாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் சசிகாந்த் செந்தில் எனவும்,இப்படி ஒரு நல்ல வேட்பாளரை கொடுத்தற்கு சோனியா, ராகுலுக்கும், தலைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.
2021 சட்டமன்ற தேர்தலில் இங்கு வந்த போது 10000 வாக்குகள் வித்தியாசத்தில் கூட்டணி எம்எல்ஏ துரை.சந்திரசேகரை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி எனவும் தெரிவித்தார். பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் கடந்த 3ஆண்டுகளில் 13கோடியே 27லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 37தார் சாலைகள், 33 சிமெண்ட் சாலைகள், 62 பேவர் ப்ளாக் சாலைகள் அமைக்கபப்ட்டுள்ளதாக கூறினார்.
நீண்ட காலம் நிலுவையில் இருந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற பணிகள் 42 கோடி ருபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதாகவும், பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், 100கோடி ருபாய் மதிப்பீட்டில் ஆரணியாற்றங்கரை இருபுறம் கான்க்ரீட் சுவர் அமைத்து சீரமைப்பு பணி, நடைபெற்று வருகின்றன எனவும், 29கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழவேற்காடு முகத்துவாரம் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றன எனவும், பொன்னேரி சின்னகாவனம் இடையே 70 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பால பணிகள், 55கோடி மதிப்பீட்டிலான பொன்னேரி பாதாள சாக்கடை பணிகள் 95% முடிவடைந்துள்ளதாக கூறினார்.
ஒவ்வொரு தேர்தலில் கலைஞர் தேர்தல் வாக்குறுதிகளை கூறி சொன்னதை செய்வார் என்பது போல தற்போது முதல்வரும் சொன்னதை தான் செய்வார் எனவும் பொன்னேரி தொகுதிக்கான வாக்குறுதிகளாக பல கூறப்பட்டுள்ளதாகவும், பொன்னேரி அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் கூடிய முதல் தர மருத்துவமனையாக மாற்றப்படும் எனவும், அனைத்து குக்கிராமங்களுக்கு பேருந்து வசதி விரிவுபடுத்தப்படும் எனவும், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும், பொன்னேரி சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 50%வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும்,
மாதரவம் அல்லது விம்கோ நகரில் இருந்து மீஞ்சூர் வரையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என தெரிவித்தார். பாரம்பரிய மீனவ சமூக மக்கள் பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் எனவும், மீனவர்கள் நலன் பாதுகாப்பதற்காக தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கப்படும் எனவும், இயற்கை சீற்றம் ஏற்படும் காலங்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மாயமாவதை தவிர்க்கும் வகையில் தடையற்ற தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார்.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும், உதாரணமாக 2021ஆம் தேர்தலில் வெற்றி பெற்றதும் கொரோனா 2ஆம் அலையிலும் ஒன்றிய அரசு கொடுக்கவில்லை எனவும் அப்போதைய சூழலிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி முதல் கையெழுத்தாக கொடுக்கப்பட்டது எனவும், 3ஆண்டுகளில் 460கோடி முறையை பயணம் செய்துள்ளனர் எனவும் இந்த திட்டத்தை அருகில் உள்ள மாநிலங்கள் திட்டங்களில் சேர்ப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
திட்டத்தை எவ்வளவு அதிக மக்கள் பயன்படுத்துகிறார்களோ அதுதான் திட்டத்தின் வெற்றி எனவும், பிங்க பஸ் என அழைக்காமல் ஸ்டாலின் பஸ் என அழைப்பதே வெற்றி என்றார். சொந்த காலில் பெண்கள் நிற்க வேண்டும் என அறிமுகப்படுத்தப்பட்டது தான் புதுமைப்பெண் திட்டம் எனவும், 3 வருடத்தில் 3லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர் எனவும்,இந்தாண்டு முதல் ஆண்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
குழந்தையை பார்த்து கொண்டு, உணவு கொடுத்து, கல்வியை கொடுக்க திராவிட மாடல் அரசு உள்ளது என பொதுமக்கள் வாழ்த்துகிறார்கள் எனவும், பக்கத்து மாநிலங்கள் இங்கு வந்து இதனை பார்த்து செயல்படுத்தி உள்ளன எனவும், காலை உணவுத்திட்டத்தில் 18 லட்சம் குழந்தைகள் நாள்தோறும் பயனடைந்து வருவதாக தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் செயல்படுத்தவே முடியாது என கூறிய நிலையில் கடும் நிதி நெருக்கடியிலும், தற்போது 1கோடியே 16லட்சம் பெண்கள் மாதந்தோறும் 1000ரூபாய் பெற்று பயனடைந்து வருவதாகவும்,
சிறிய சிறிய குறைகள் உள்ள நிலையில் தேர்தல் முடிந்த பிறகு குறைகள் அனைத்தும் களையப்பட்டு 1 கோடியே 60 லட்சம் மகளிருக்கும் மகளிர் உரிமைத்திட்டம் கிடைக்கும் என்றார். 3 ஆண்டு சாதனைகளை கூறி வருகிறோம் எனவும், இனிமேல் பிரதமர் பெயரை கூறும்போது 29 பைசா என்றே கூற வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறினார். தூத்துக்குடி, நெல்லை 10 நாட்கள் வெள்ளத்தில் மூழ்கி இருந்த போது நான் 10நாட்கள் அங்கேயே தங்கி இருந்ததாகவும், திமுக உட்பட கூட்டணி கட்சியினர் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும், சென்னை 3 நாட்கள் வெள்ளத்தில் மூழ்கிய போதும் களத்தில் இருந்தோம் எனவும், 29 பைசா வந்தாரா என கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வால் 22 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அரியலூர் அனிதா தொடங்கி அனைத்து குழந்தைகளின் குடும்பத்தையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி நினைப்பாகவே இருப்பதாக கூறி வருகிறார் எனவும் அடிக்கல் நாட்டி ஒரே ஒரு செங்கல் மட்டுமே வைத்தீர்களே எனவும், அந்த செங்கல்லை கையில் காட்டி கேள்வி எழுப்பினார். ஒரே கல்லை காட்டி மருத்துவமனை என கூறி வருகின்றனர் எனவும், ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை எனவும், தமிழ்நாட்டிற்கு பிறகு அறிவித்த பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனை கேட்டால் பாதம் தாங்கி பழனிசாமிக்கு கோபம் வருகிறது எனவும், ஏன் கள்ளக்காதல் என சாடினார். உரிமைகளை மீட்போம், என கூறுகிறீர்களே யாரிடம் இருந்து காப்பாற்ற போகிறீர்கள்?
ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் உண்டா என்றார். ஐபிஎல்லில் அணிகள் நிறைய உள்ளன எனவும், அதிமுகவும், ஐபிஎல்லும் ஒன்று எனவும் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, மோடி அணி, அமித்ஷா அணி, சசிகலா அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி என உள்ளன எனவும், ஐபிஎல்லில் ஏலம் விடுவது போல அதிமுகவில் ஏலம் விடுவதாக கூறினார். இந்த பிராசார கூட்டத்தையே வேட்பாளர் அறிமுகக் கூட்டமாக எடுத்து கொள்ள வேண்டும் எனவும் சசிகாந்த் செந்திலை 6லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் தற்போது 7வது நாளாக 11தொகுதியில் பிரசாரம் செய்துள்ளதாகவும், இந்த 11தொகுதியிலும் நிச்சயம் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் கலைஞர் பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 தொகுதி ஜெயித்து தேர்தல் வெற்றியை கொடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டு கொண்டார்.
Updated On: 29 March 2024 8:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்