/* */

புழல் அருகே மருந்து கடையில் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் பணம் கொள்ளை

புழல் அருகே விநாயக புரத்தில் மருந்து கடையின் பூட்டை உடைத்து ₹.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

புழல் அருகே மருந்து கடையில் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் பணம் கொள்ளை
X

புழல் அருகே மருந்து கடை பூட்டை உடைத்து ₹.8 லட்சம் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையடித்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் அடுத்த விநாயக புரம் பகுதி கல்பாளைத்தை சேர்ந்தவர் சேர்ந்த செந்தில்குமார்( வயது 44), இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அவரது சகோதரர் கற்பக வேல் என்பவர் கடையை கவனித்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை கடையை திறந்து வியாபாரம் முடித்து இரவு கடையை மூடிவிட்டு வழக்கம் போல் வீடு சென்றார்.

இன்று காலை கடையை திறக்க வந்த செந்தில்குமார் கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் பார்த்தபோது அதில் வைத்திருந்த ₹.8 லட்சம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து புழல் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கடையை பார்வையிட்டு கைரேகை நிபுணர்களை வர வைக்கப்பட்டு அங்கு பதிந்துள்ள கைரேகை பதிவு செய்து கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி இது குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். எப்பொழுதும் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும் பகுதியில் இச்சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 3 May 2024 10:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  7. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  8. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  10. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்