/* */

சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!

திருத்தணியில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் திடீரென மயங்கி மாரடைப்பால் உயிரிழந்தார.

HIGHLIGHTS

சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!
X

திருத்தணி முருகன் கோயில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் படியேறி வரும் பொழுது திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயில் நேற்று கிருத்திகை தினம் என்பதால் அண்டை மாநிலங்களும் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தைச் கிராமத்தை சேர்ந்தவர் முத்து இவர் தனது மனைவி ராதிகா மற்றும் உறவினர்கள் அனைவருடன் இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு மினி வேனில் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனத்திற்கு வந்தார். முத்து முருகன் கோயிலில் மலைக்கோயில் வழியாக படிக்கட்டுகள் வழியாக சாமி தரிசனத்திற்கு வந்தவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த அவரது உறவினர்கள் 108 அவசர ஊர்திக்கு தகவல் அளித்தனர்.விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முத்துவை சோதனை செய்தபோது அவர் உயிர் நாடி துடிப்பு இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மருத்துவர்கள் சோதித்துள்ளனர். அப்போது முத்து ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் இறந்து போன முத்துவின் உடலை சோழவாரத்திற்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 9 May 2024 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு