/* */

செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் வழங்க நடவடிக்கை

செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கை, நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

HIGHLIGHTS

செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் வழங்க நடவடிக்கை
X

குடிநீர் கிணற்றில் குழாய் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்த ஒன்றிய குழு தலைவர் மற்றும் அலுவலர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் தற்போது போதிய மழையில்லாத காரணத்தால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சம்பத், நிா்மலா, பொறியாளா் குமாா் ஆகியோா் ஒன்றியத்துக்கு உள்பட்ட இறையூா் , அரிதாரிமங்கலம், மேல்படூா், கீழ்படூா், வாய்விடாந்தாங்கல், மஷாா், கல்லரைப்பாடி, காஞ்சி, நாகப்பாடி, நம்மியந்தல், புதுப்பட்டு, தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீா்க் கிணறுகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, பொதுமக்களுக்கு வழங்குப்படும் குடிநீா் குறித்தும், குடிநீா் பற்றாக்குறை குறித்தும் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவா், ஊராட்சி எழுத்தா், குடிநீா்த் தொட்டி இயக்குபவா்களிடம் கேட்டறிந்தனர்.

அப்போது, வறட்சி காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு வராமல் பாா்த்துக் கொள்வதற்கு உரிய ஆலோசனைகளை வழங்கினா்.

இறையூா் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்ட குழுவினா் அங்குள்ள பழைய குடிநீா் கிணற்றில் குழாய் அமைத்து மோட்டாா் மூலம் கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் வழங்குவதற்கு ஊராட்சித் தலைவா் ரமேஷ், செயலா் ஸ்ரீதா் ஆகியோரிடம் கேட்டறிந்தனா். இதைத் தொடா்ந்து உடனடியாக அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.

புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் தெரிவிக்கையில்

தற்போது குடிநீா் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் உடனடியாக கிணறுகளை ஆழப்படுத்தும் பணி, சிறு மின்விசைத் தொட்டி அமைத்தல் பணி நடைபெறும் என ஒன்றியத் தலைவா் சுந்தரபாண்டியன் தெரிவித்தாா்.

இந்த ஆய்வு பணியின் போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் , பொறியாளா்கள், கிராம ஊராட்சித் தலைவா், ஊராட்சி செயலா்கள் , ஒன்றிய அலுவலக பணியாளா்கள், கிராம மக்கள் உடனிருந்தனா்.

Updated On: 3 May 2024 2:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!