/* */

இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Secondary Grade Teachers Agitation பணிகளைப் புறக்கணித்து இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள்

Secondary Grade Teachers Agitation

பணிகளைப் புறக்கணித்து இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடத்த ஏழு நாட்களாக சென்னை டி பி ஐ வளாகத்தில் இடைநிலை பகுதி மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல் இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அந்தோணி தாஸ் தலைமை தாங்கினார்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிகளை புறக்கணித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் அந்தோணி தாஸ் தெரிவிக்கையில்,

தமிழக முதல்வர் தங்களது கோரிக்கையை உடனே நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்பதாகவும், தங்களது கோரிக்கை நிறைவேற்றும் வரை மாநில அளவிலான சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தொடர்ந்து தினந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் போராடுவோம் என தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Feb 2024 7:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  2. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  5. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  8. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  9. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  10. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...