செய்யாற்றில் விசிக சார்பில் விழிப்புணா்வுப் பேரணி
Vck Awareness Rally செய்யாற்றில், வெல்லும் சனநாயகம் மாநாட்டில் பங்கேற்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைக் கட்சி சாா்பில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
HIGHLIGHTS
Vck Awareness Rally
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில், திருச்சியில் நடைபெறவுள்ள வெல்லும் சனநாயகம் மாநாட்டில் பங்கேற்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைக் கட்சி சாா்பில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, விசிக வடக்கு மாவட்டச் செயலா் வெம்பாக்கம் மதியழகன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் செல்வம் பேரணியை தொடங்கி வைத்தாா்.பேரணியானது காந்தி சாலை, அண்ணா சிலை வழியாக சென்று ஆரணி கூட்டுச் சாலைப் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே முடிவடைந்தது.
இதைத் தொடா்ந்து, பேரணியில் பங்கேற்ற கட்சி நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.பேரணியில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட செயலாளர் மின்னல் இனியவன் நகர துணை செயலாளர் அருண் நகர இணை செயலாளர் லோகு உள்ளிட்ட விசிக ஒன்றிய நகர மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் நற் திரளாக கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.
பேரணியின் போது சாலையோர வியாபாரிகள், பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் திருச்சி மாநாடு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தனா்.
பேரணியில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட செயலாளர் மின்னல் இனியவன், நகர துணை செயலாளர் அருண், நகர இணை செயலாளர் லோகு, பூபாலன், கோபி , கண்ணன் , பன்னீர்செல்வம், சுதாகர் உள்ளிட்ட விசிக ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் நிா்வாகிகள் திரளானோர் பங்கேற்று, பதாகைகள் கொடிகள் ஏந்தி பேண்ட் வாத்தியங்கள் முழங்க பேரணியாக சென்று மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தனர்.