/* */

கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்

கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
X

கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கரூர் மாவட்ட பகுதியில் உரிய ஆவணம் இன்றி இதுவரை பறக்கும் படைகள் மூலம் ரூ.83,63,318-ம், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் ரூ.52,13,766-ம் என மொத்தம் ரூ.1,35,77,584 மதிப்பிலான தொகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது என்றும், அவ்வாறு கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம். பரிசுப்பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றதா என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் பறக்கும் படையினரும், நிலையான ஆய்வுக் குழுவினரும் கழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் இன்று 29.03.2024 கரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 1 வாகனத்தில் ரூ.32084/-, குளித்தலை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாகனத்தில் ரூ.92960/- என 2 வாகனங்களில் மொத்தம் ரூ.4,13,800/- பறக்கும் படைகள் மூலமாகவும், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் உரிய ஆவணம் இன்றி ரொக்கம் கொண்டு சென்றது கண்டறியப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை பறக்கும் படைகள் மூலம் ரூ.83.63,18-ம் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் ரூ.52.13,766-ம் என மொத்தம் ரூ.1.35,77,384 மதிப்பிலான தொகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை சி.விசில் செயலி மூலம் 201 புகார்களும், தொலைபேசி மூலம் 15 புகார்களும் 216 புகார்கள் வரபெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On: 29 March 2024 3:19 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை